சச்சின் மகளா...! இந்தி நடிகையா...! வைரலான சாரா...! சாரா... கோஷம் !!!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுப்மன் கில் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அவர் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் தொடரில் இலங்கை எதிரான ஆட்டத்தில், தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை அடித்து, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார்.ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். நேற்று முந்தினம் நடைபெற்ற இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கில் 149 பந்துகளில் 208 ரன்கள் எடுத்தார், அவர் ஒருநாள் போட்டிகளில் 200 ரன்கள் கிளப்பில் நுழைந்த ஐந்தாவது இந்திய வீரர் ஆனார்.இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் தெண்டுல்கர், அவரைத் தொடர்ந்து வீரேந்திர சேவாக். கடந்த ஆண்டு டிசம்பரில் வங்காளதேசத்திற்கு எதிராக சிறந்த இரட்டை சதம் அடித்த இஷான் கிஷானுக்கு முன் ரோகித் சர்மா மூன்று இரட்டை சதங்களை அடித்தார் இதன் மூலம் தெண்டுல்கரின் 24 வருட ச